ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டர்களுக்கு சாதகமான பிட்ச் என்பதால் ரன் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில், ஓபனர்கள் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன் மழை பொழிந்தனர். பிறகு, இருவரும் அரை சதமும் எடுத்தனர்.
மெக்குர்க் 20 பந்தில் 50 ரன்களையும், அபிஷேக் போரல் 36 பந்துகளில் 65 ரன்களையும் எடுத்ததால், டெல்லி அணி பவர் பிளேவில் 78 ரன்களை குவித்து அசத்தியது. இருப்பினும், அதன்பிறகு, மிடில் வரிசை பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
ஷாய் ஹோப் 1 (1), அக்சர் படேல் 15 (10), ரிஷப் பந்த் 15 (13) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பிய நிலையில், இறுதிக் கட்டத்தில், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 பந்துகளில் தலா மூன்று பவுண்டரி, சிக்ஸர்கள் உட்பட 41 ரன்களை குவித்தார். இதனால், டெல்லி அணி 20 ஓவர்களில் 221/8 ரன்களை எடுத்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜெய்ஷ்வால் 4 (2), பட்லர் 19 (17) போன்றவர்கள் ஆட்டமிழந்த நிலையில், சஞ்சு சாம்சன் மட்டும் தனியொருவனாக போராடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்.
சாம்சன் ஒருபக்கம் அதிரடி காட்டிய நிலையில், ரியான் பராக் 27 (22), ஷுபம் துபே 25 (12), ரௌமேன் பௌல் 13 (10) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இருப்பினும், சாம்சன் தொடர்ந்து வெற்றிக்காக போராடினார்.
இறுதிக் கட்டத்தில், சாம்சன் சிக்ஸர் அடித்தபோது, அதனை பவுண்டரி லைனில் நின்று பிடித்த பௌலரின் கால், பவுண்டரி லைனில் லேசாக உரசியது. ஆனால், இதை பார்த்தும் அவுட் என மூன்றாவது நடுவர் அறிவித்தார். இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 201/8 ரன்களை எடுத்து, தோற்றது.