சவுதி செய்திகள்

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடனான மெய்நிகர் கூட்டத்தில் சவுதி இளவரசர் பங்கேற்பு

ரியாத்
காசாவின் நிலைமை குறித்து விவாதிக்க பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடனான மெய்நிகர் கூட்டத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் செவ்வாய்கிழமை கலந்து கொள்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் வளரும் நாடுகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பைச் சேர்ந்த மற்ற தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸும் பங்கேற்கிறார்.

பிரிக்ஸ் உறுப்பினர்களான பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர் என்று தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா அலுவலகம் தெரிவித்துள்ளது

BRICS இன் தற்போதைய தலைவராக தென்னாப்பிரிக்கா இருப்பதால் “அசாதாரண கூட்டத்திற்கு” ராமபோசா தலைமை தாங்குவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள “மனிதாபிமான நெருக்கடி” குறித்து தலைவர்கள் அறிக்கைகளை வழங்குவார்கள் என்றும், கூட்டறிக்கையை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button