சவுதி செய்திகள்இந்தியா செய்திகள்

திருவனந்தபுரத்தில் இருந்து ரியாத்துக்கு புதிய நேரடி விமான சேவையை தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

இந்தியாவின் முதல் சர்வதேச பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்துக்கு புதிய நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது.

சவுதி அரேபியாவில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஓணம் பரிசாக செப்டம்பர் 9 திங்கள் அன்று புதிய சேவை தொடங்கப்பட்டது.

இதன் மூலம் வெளிநாட்டவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலத்தவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.

IX521 என்ற விமானம், திங்கட்கிழமைகளில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு இயக்கப்படும்.

இந்த விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7:55 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு ரியாத்தை சென்றடையும். திரும்பும் விமானம் IX 522 இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய் கிழமைகளில் காலை 7:30 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button