ஜெட்டா விமான நிலையத்தில் ரம்ஜான் பணிகள் சுமூகமாக நடைபெறும் – போக்குவரத்து அமைச்சர்

போக்குவரத்து அமைச்சர் சலேஹ் பின் நாசர் அல்-ஜாஸர், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன், ரமலான் 2024 ல் உம்ரா சீசனுக்கான திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்து ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வுப் பயணத்தின் போது வலியுறுத்தினார்.
சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவரான அல்-ஜாஸர், “விருந்தினர்களின் வசதியை மேம்படுத்தும் உயர்தர சேவைகளை வழங்குவதே எங்களின் நோக்கம்” என்றார்.
27 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் விமான நிலையத்தின் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
ஷாபான் மாதத்தின் (பிப். 11) தொடக்கத்தில் இருந்து ரமலான் 10 (மார்ச் 20) வரை 30,572 விமானங்களில் 5.4 மில்லியன் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடுகளை KAIA பதிவு செய்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 6,000 பயணிகள் தங்கக்கூடிய குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள், 522 பயணிகள் காத்திருக்கும் இடம், 83 பேருந்துகள் நிறுத்தும் இடம் போன்றவற்றை சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவர் அல்-ஜாஸர் மேற்பார்வையிட்டார்.



