உலகளவில் 6,25,000 ஏழைகளுக்கு உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் QRCS!

உணவுப் பற்றாக்குறை உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். குறிப்பாக ஏழை மற்றும் இடம்பெயர்ந்த மக்கள், தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் உணவளிக்க ஒவ்வொரு நாளும் போராடுகிறார்கள். மிகக் குறைந்த வருமானம், அதிக உணவு விலைகள், மட்டுப்படுத்தப்பட்ட உணவு வளங்கள் மற்றும் பிற காரணிகளால், தீவிர வறுமையில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமப்படுகிறார்கள்.
இதனால், QRCS தேவைப்படுபவர்களுக்கு உணவை வழங்குகிறது, ஏழை மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை பராமரிக்க இது உதவுகிறது. இதன் நிலையான வளர்ச்சி இலக்கு (SDGs) பூஜ்ஜிய பசி என்பதாகும். இந்த ஆண்டு, QRCS 6,25,120 பேர் பயன்பெறும் வகையில், QR31,129,400 மதிப்பீட்டில் 15 உணவுப் பாதுகாப்புத் திட்டங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
இலக்கு நாடுகளின் பட்டியலில் பாலஸ்தீனம் (காசா மற்றும் மேற்குக் கரை), சிரியா, ஏமன், நைஜர், சூடான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், லெபனான், ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கும். உள்ளூர் உணவுப் பொருட்களைக் கொண்டு பல்வேறு உணவுப் பொட்டலங்களை விநியோகித்தல், பேக்கரிகளுக்கு இலவசமாக ரொட்டி தயாரித்து விநியோகிக்க மாவு வழங்குதல் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.
2023 ஆம் ஆண்டில், நைஜர், பாலஸ்தீனம், மங்கோலியா, அல்பேனியா, சூடான், லெபனான், ஏமன், கொசோவோ, ஜேர்டான் , ஆப்கானிஸ்தான், சோமாலியா, மாலி, மலாவி, கென்யா, இலங்கை, நேபாளம், எத்தியோப்பியா, சிரியா மற்றும் ஈராக் போன்ற வெளிநாடுகளுக்கு QRCS க்கு 4.5% (QR9,348,828 )உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை வழங்கியுள்ளது.
மோதல் மற்றும் பேரிடர் பகுதிகளில் பசியால் வாடும் மக்களுக்கு உதவ QRCS மூலம், qrcs.qa என்ற இணையதளம், நன்கொடையாளர் சேவை 66666364, வீட்டு நன்கொடை சேகரிப்பு 33998898 அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம் நன்கொடைகளை அனுப்பலாம்.