கொந்தளிப்பில் சிக்கிய கத்தார் ஏர்வேஸ் விமானம்: 12 பேர் காயம்

தோஹாவில் இருந்து டப்ளினுக்கு மே 26, ஞாயிற்றுக்கிழமை சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் துருக்கிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது கொந்தளிப்பில் சிக்கியது. இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கத்தார் ஏர்வேஸ் விமானமான QR017, போயிங் 787 ட்ரீம்லைனரில் ஆறு பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் காயமடைந்ததாக X-ல் டப்ளின் ஏர்போர்ட் பதிவிட்டுள்ளது.
“தோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் QR017 ஞாயிற்றுக்கிழமை 13.00 க்கு சற்று முன்பு டப்ளின் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டபடி பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும், விமான நிலைய காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உள்ளிட்ட அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டது. 6 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் [12 மொத்தம்] விமானம் துருக்கியின் மீது வான்வழியாகச் செல்லும் போது கொந்தளிப்பை அனுபவித்ததால் காயங்கள் ஏற்பட்டது” என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டப்ளின் விமான நிலைய குழு பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு தரையில் முழு உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.
கத்தார் ஏர்வேஸ் ஒரு அறிக்கையில், “சிறிய எண்ணிக்கையிலான பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர், இப்போது அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறியது.



