சவூதி இளவரசர் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் தனது முதல் அதிகாரபூர்வ பயணத்தை சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் வெள்ளிக்கிழமை ஜெட்டாவில் மேற்கொண்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரியாத் மற்றும் தெஹ்ரான் இடையேயான உறவுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் உதவியுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதைத் தவிர, “ராஜ்யம் மற்றும் ஈரான் இடையேயான உறவுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான எதிர்கால வாய்ப்புகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள்” ஆகியவற்றையும் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
சந்திப்பு குறித்து திரு அமிரப்துல்லாஹியன் கூறுகையில், “இன்று காலை, நாங்கள் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் எமிர் முகமது பின் சல்மானுடன் ஜெட்டாவில் 90 நிமிட சந்திப்பு நடத்தினோம். இரு நாட்டு தலைவர்களின் விருப்பத்துடன், அனைத்து துறைகளிலும் நிலையான இருதரப்பு உறவுகள் வலியுறுத்தப்பட்டன என்று தெரிவித்தார்.



