அமீரக செய்திகள்

குழந்தைகள், பெண்களுக்கு உதவிப் பொதிகளை வழங்கும் ஐக்கிய அரபு அமீரகம்

காசாவில் உள்ள மக்களுக்கு ஈத் ஆடைகளை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது.

‘ஆபரேஷன் சிவல்ரஸ் நைட் 3 ‘ மூலம் பாலஸ்தீன மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து மனிதாபிமான ஆதரவை வழங்குவதன் ஒரு பகுதியாக, காசாவில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்ற வகையில் ஐக்கிய அரபு அமீரகம் உதவிப் பொதிகளை வழங்கியுள்ளது .

எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் (ERC) பொதுச்செயலாளர் ஹமூத் அப்துல்லா அல் ஜுனைபி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறிப்பாக உதவிப் பொதிகளைத் தயாரிப்பதற்காக “ஆபரேஷன் சிவல்ரஸ் நைட் 3” முயற்சிகளை எடுத்துரைத்தார்.

இந்த உதவிப் பொதிகள் காசா பகுதிக்கு அனுப்பப்படும் தினசரி மனிதாபிமான நிவாரண முயற்சிகள் மற்றும் உணவு உதவிகளில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது, குறிப்பாக வடக்கு பிராந்தியத்தில் கவனம் செலுத்துகிறது.

“காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸால் தொடங்கப்பட்ட முழுமையான நிவாரண முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உணவுக் கூடைகளின் விநியோகம் உள்ளது. இது ஏர் டிராப் செயல்பாடுகள் மூலமாகவோ அல்லது ரஃபா எல்லைக் கடவு வழியாக நுழையும் UAE உதவித் தொடரணிகள் மூலமாகவோ எளிதாக்கப்படுகிறது” என்று அல் ஜுனைபி கூறினார்.

மேலும், காசா குடிமக்களுக்கு ஈத் ஆடைகளை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக அல் ஜுனைபி கூறினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button