சவுதி செய்திகள்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்திய சவுதி அரேபியா

Saudi Arabia:
சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக நெரிசலான இடங்களில் முகமூடி அணியுமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சவுதி அரேபியாவின் பொது சுகாதார ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 18, X -ல் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், “நீங்கள் சுவாச நோய்களின் அறிகுறிகளால் அவதிப்பட்டால், வீட்டை விட்டு வெளியேறுவதையும் மற்றவர்களுடன் பழகுவதையும் தவிர்க்கவும் அல்லது நீங்கள் வெளியே செல்லும்போது முகமூடியை அணிய மறக்காதீர்கள்.” என்றும்,

மற்றொரு பதிவில், “உங்கள் பாதுகாப்புக்காக, நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது கண்டிப்பாக முகமூடியை அணியுங்கள்” என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பொது ஆணையம் சமீபத்தில் கோவிட்-19 இன் துணை வகையான JN.1 ஐக் கண்டறிந்ததை அடுத்து இந்த அறிவுரை வெளிவந்துள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button