அமீரக செய்திகள்

சாதனை இலக்கை விட 400 மில்லியன் திர்ஹம்கள் அதிகமாக திரட்டிய அன்னையர் நன்கொடை பிரச்சாரம்

கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தனிநபர்கள் மற்றும் ஆதரவளிக்கும் நிகழ்வுகளின் பெரும் பங்களிப்புகளின் விளைவாக அன்னையர் அறக்கட்டளை பிரச்சாரம், சாதனை இலக்கை விட 400 மில்லியன் திர்ஹம்கள் அதிகமாக திரட்டியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், மார்ச் 4, 2024 அன்று தாய்மார்களை கௌரவிப்பதற்காக 1 பில்லியன் திர்ஹம்கள் உதவித்தொகை நிதியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த பிரச்சாரத்தை அறிவித்தார். இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தனிநபர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

பிரச்சாரம் தொடங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அதன் இலக்கை வெற்றிகரமாக தாண்டியுள்ளது. மேலும், பிரச்சாரம் ஆண்டு முழுவதும் பங்களிப்புகளை தொடர்ந்து வரவேற்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ரமலான் முடிவதற்கு ஒரு மாதத்திற்குள் அன்னையர் நன்கொடை பிரச்சாரத்திற்கான மொத்த பங்களிப்புகள் Dh1.484 பில்லியன்களாக உள்ளது.

MBR-1712062152138

இது குறித்து ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் கூறுகையில், “ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் நெருங்கி வருவதால், அன்னையர்களைக் கௌரவிக்க லட்சக்கணக்கான பங்கேற்பாளர்களை ஈர்த்த ஒரு பிரச்சாரத்தை முடிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அன்னையர் அறக்கட்டளை பிரச்சாரத்தின் வெற்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களின் கருணை, தாராள குணம் மற்றும் அவர்களின் ஆழமாக வேரூன்றிய கொள்கைகளுக்கு சான்றாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மதிப்பு அமைப்பு மற்றும் அடையாளத்துடன் ஒருங்கிணைந்த, கொடுப்பதற்கும் ஒற்றுமைக்கும் ஒரு பிரகாசமான உதாரணத்தை எமிராட்டி சமூகம் முன்வைத்துள்ளது” என்று கூறினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button