அமீரக செய்திகள்
ஈத் அல்-பித்ர் விடுமுறையை அறிவித்த அஜ்மான் அரசு

அஜ்மான் அரசாங்கத்தின் மனிதவளத் துறை, எமிரேட்டில் உள்ள அரசாங்க நிறுவனங்களுக்கான ஈத் அல்-பித்ர் விடுமுறை ஏப்ரல் 8, 2024 திங்கட்கிழமை தொடங்கி ஏப்ரல் 14, 2024 ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என்று அறிவித்தது.
அதிகாரப்பூர்வ பணிகள் ஏப்ரல் 15, 2024, திங்கள்கிழமை மீண்டும் தொடங்கும் என்று அஜ்மான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில், அஜ்மான் அரசாங்கத்தின் மனிதவளத் துறையானது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அறிவார்ந்த தலைமைக்கும் மக்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
#tamilgulf