அமீரக செய்திகள்

காசாவிற்கு 2-வது தொகுதி நிவாரணப் பொருட்கள் அனுப்பிய லுலு குரூப்

மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வரும் காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக லுலு குரூப் இன்டர்நேஷனல் மூலம் இரண்டாவது தொகுதி நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மிகவும் தேவையான உதவி மற்றும் நிவாரணப் பொருட்களில் 50 டன் உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் இருந்தன. இது திங்கட்கிழமை கெய்ரோவில் உள்ள எகிப்து ரெட் கிரசென்ட் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

லுலு எகிப்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் ஹாதிம் சைட், லுலு எகிப்து மற்றும் பஹ்ரைன் இயக்குனர் ஜூசர் ருபாவாலா, பிராந்திய இயக்குனர் ஹுசெபா குரேஷி மற்றும் பிற அதிகாரிகளிடமிருந்து எகிப்து ரெட் கிரசென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராமி எல் நாசர் நிவாரணப் பொருட்களைப் பெற்றார்.

“எகிப்து செஞ்சிலுவைச் சங்கம் காசா மக்களுக்கு விரைவில் நிவாரணப் பொருட்களை வழங்கும்” என்று டாக்டர் எல் நாசர் கூறினார்.

மேலும், அபுதாபியை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் உதவியை அவர் வரவேற்றார் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுபலியின் முயற்சிகளைப் பாராட்டினார்.

டிசம்பரில், லுலு குழுமம் 50 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது குற்றிப்பிடத்தக்கது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button