KSrelief அதிகாரி UN பிரதிநிதி வர்ஜீனியா காம்பாவை சந்தித்தார்!

ரியாத்
KSrelief உதவி பொது மேற்பார்வையாளர் அஹ்மத் பின் அலி அல்-பைஸ் வெள்ளிக்கிழமை ரியாத்தில் குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்களுக்கான ஐ.நா பொதுச் செயலர் சிறப்புப் பிரதிநிதி வர்ஜீனியா காம்பாவை சந்தித்தார். மனிதாபிமானம் மற்றும் ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிவாரணம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
ஏஜென்சியின் நிவாரணம் மற்றும் மனிதாபிமான முயற்சிகளை காம்பா பாராட்டினார், மேலும் மையத்திற்கும் ஐநா அமைப்புகளுக்கும் இடையிலான மூலோபாய உறவை அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், KSrelief லெபனான், பாகிஸ்தான் மற்றும் மொரிட்டானியாவில் திட்டப்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. KSrelief மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் அறுவை சிகிச்சைக்கான தன்னார்வ மருத்துவத் திட்டத்தை மொரிட்டானியாவில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரை செயல்படுத்தியது.
கூடுதலாக, உதவி நிறுவனம் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 460 குளிர்கால பைகளை விநியோகித்தது, இதன் மூலம் 3,220 தனிநபர்கள் பயனடைந்தனர். லெபனானில் ஒரு ஆம்புலன்ஸ் சேவைக்கு நிதியளித்தது, இது கடந்த வாரம் 67 பணிகளைச் செய்தது.



