Gaza: இஸ்ரேலிய தாக்குதல்களில் பலியான பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியது

Gaza:
அக்டோபர் 7 முதல் காசா பகுதியில் நடந்துவரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் பலஸ்தீனர்களின் இறப்பு எண்ணிக்கை 20,000 ஐ எட்டியுள்ளது என்று ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 8,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 6,200 பெண்கள் உள்ளனர். 52,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 6,700 பேர் காணவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 310 மருத்துவ பணியாளர்கள், 35 சிவில் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் 97 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது, ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.



