கனமழையின் போது ஏற்பட்ட அனைத்து போக்குவரத்து அபராதங்களையும் ரத்து செய்து அறிவித்த துபாய்

துபாயில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பெய்த மழையின் போது வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என
துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மரி அறிவித்துள்ளார்.
போக்குவரத்து விதி மீறல்களைத் தள்ளுபடி செய்வதற்கான முடிவு, துபாய் காவல் துறையின் சமூகத்திற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான், எமிரேட்டில் கடுமையான வானிலையின் தாக்கத்தை அவசரமாகத் தணிப்பதற்கான தொடர் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக ஒப்புதல் அளித்திருந்தார் .
திங்களன்று, ஷார்ஜா காவல்துறை சமீபத்திய சாதனை மழையின் போது வாகன ஓட்டிகள் செய்த போக்குவரத்து விதி மீறலுக்கான அனைத்து அபராதங்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. மேலும், அமீரகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வாகன சேத சான்றிதழ்களையும் ஷார்ஜா காவல்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.