சவுதி செய்திகள்

320 கிலோ கட் கடத்த முயன்ற முயற்சிகள் முறியடிப்பு

ரியாத்: இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில், ஜசானில் உள்ள ராஜ்யத்தின் எல்லைக் காவல்படையின் அதிகாரிகள் மொத்தம் 320 கிலோ கட் நாட்டிற்கு கடத்த முயன்ற முயற்சிகளை முறியடித்துள்ளனர் என்று சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

80 கிலோ கட் கடத்த முயன்றதாகக் கூறப்படும் மூன்று எத்தியோப்பியா பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

மூன்று சந்தேக நபர்களும் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.

இதுபோன்று ஜசானில் உள்ள அல்-அர்தாவில் 240 கிலோகிராம் கட் கடத்தலை நிலக் காவல் படையினர் முறியடித்தனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button