ஓமன் செய்திகள்

ஓமனில் பிப்ரவரி 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

ஓமன் சுல்தானகத்தின் வளிமண்டலமானது ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25, 2024 மாலை முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பாதிக்கப்படும் என்றும், இது மேலும் பல நாட்கள் நீடிக்கும் அறிகுறிகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA) கூறுகையில், “மேகங்கள் உருவாவதும், சிதறிய மழையும் காரணமாக முசந்தம் கவர்னரேட் மற்றும் ஓமன் கடலின் கரையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், மேலும் இது ஹஜர் மலைகளின் சில பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படலாம்.”

முசந்தத்தின் மேற்குக் கடற்கரைகள் மற்றும் ஓமன் கடலின் கரையோரப் பகுதிகளில் மிதமான கடல் அலைகள் 1.5 – 2.5 மீட்டர் வரை உயரமாக எழும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு காற்றின் செயல்பாடு காரணமாக அரபிக்கடலின் கரையோரத்தில் தூசி புயல்களும், பாலைவனம் மற்றும் திறந்த பகுதிகளில் குறைந்த கிடைமட்ட பார்வைக்கான வாய்ப்புகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button