அமீரக செய்திகள்

துபாய் பாலைவனத்தில் சாலைக்கு வெளியே ஸ்டண்ட் செய்த 5 இளைஞர்கள் காயம்

Dubai:
18 முதல் 20 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்கள் தங்கள் எஸ்யூவி-ல் ஸ்டண்ட் செய்யும் போது பாலைவனத்தில் கவிழ்ந்ததில் மிதமான முதல் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று துபாய் காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

துபாய் காவல்துறையின் போக்குவரத்துப் பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறுகையில், கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணியளவில், அல் ருவாயாவில் ஏற்பட்ட வாகன விபத்து பற்றிய புகாருக்கு போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

“எம்ஏஎம் என அடையாளம் காணப்பட்ட 19 வயதான எமிராட்டி டிரைவர், மணற்பாங்கான பகுதியில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி ஸ்டண்ட் செய்த போது திடீரென வளைந்ததால், வாகனம் கவிழ்ந்து, டிரைவர் மற்றும் நான்கு பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது”.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேஜர் ஜெனரல் அல் மஸ்ரூயி தெரிவித்தார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button