அமீரக செய்திகள்

பணியில் இருந்த போது சாலை விபத்தில் 2 போலீசார் உயிரிழப்பு

பணியில் இருந்த போது சாலை விபத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அபுதாபி போலீஸ் பொது கட்டளை தெரிவித்துள்ளது.

லெப்டினன்ட் முஹம்மது ஒபைட் முபாரக் மற்றும் லெப்டினன்ட் சவுத் காமிஸ் அல் ஹொசானி ஆகியோர் காவல் துறை அறிக்கைக்கு பதிலளிக்கும் போது சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

அவர்கள் மரணத்திற்குப் பின் முதல் காவலர் பதவியிலிருந்து லெப்டினன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டனர்.

தியாகிகளின் குடும்பங்களுக்கு துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் பதக்கத்தை வழங்கினார்.

உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பையும் ஷேக் சைஃப் பாராட்டினார். மேலும், “அவர்கள் (லெப்டினன்ட் முபாரக் மற்றும் அல் ஹொசானி) விசுவாசம் மற்றும் நேர்மையின் பாதையில் பிரகாசித்த கலங்கரை விளக்கங்கள் மற்றும் எமிரேட்ஸ் மக்களுக்கு சிறந்த நேர்மறையான முன்மாதிரிகலக இருந்தனர்” என்று கூறினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button