வேலை இழப்பு காப்பீடு அபராதம் பற்றி UAE ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வேலை இழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு நெருங்கிவிட்டது, இந்தத் திட்டத்திற்கு ஊழியர்கள் விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.
வேலைப் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவான அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய மறந்தவர்கள் அபராதம் செலுத்துவதுடன் மற்ற தண்டனைகளையும் சந்திக்கும் அபாயம் உள்ளது.
இத்திட்டம் குறைந்த செலவில், வேலை இழப்பு ஏற்பட்டால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிதி உதவியைப் பெறுவதற்கான எளிய வழியாகும்.
அபராதம் முதல் விதிவிலக்குகள் வரை, வேலை இழப்புக் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.
அபராதம்
காலக்கெடுவிற்கு முன் திட்டத்தில் பதிவு செய்யாத தகுதியுள்ள ஊழியர்களுக்கு 400 டிஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் .
சந்தா செலுத்திய தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரீமியம் செலுத்தாத ஊழியர்களிடமிருந்து 200 டிஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
இத்திட்டத்தின் காப்பீட்டுப் பலன்களை மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு, 20,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் .
சம்பளப் பிடித்தம்
திட்டத்தில் பதிவு செய்யாத ஊழியர்கள் அபராதங்களை எதிர்கொள்வார்கள், முதலாளிகள் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
மனித வள அமைச்சகத்தின் படி , செலுத்தப்படாத அபராதங்கள் ஊழியர்களின் சம்பளம் அல்லது சேவையின் இறுதிப் பலன்களில் இருந்து கழிக்கப்படும்.
புதிய வேலை அனுமதி இல்லை
காப்பீட்டுத் திட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து அபராதங்களையும் செலுத்தத் தவறிய பணியாளர்கள், புதிய பணி அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விதிவிலக்குகள்
திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விதிவிலக்குகள் உள்ளன.
முதலீட்டாளர்கள், வணிக உரிமையாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள், 18 வயதுக்குட்பட்ட சிறார்களும், ஓய்வூதியம் பெற்று புதிய முதலாளியுடன் சேர்ந்த ஓய்வு பெற்றவர்களும் இதில் அடங்குவர்.
மேலே குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர அனைத்து மத்திய மற்றும் தனியார் ஊழியர்களும் திட்டத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளனர் மற்றும் மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.



