அமீரக செய்திகள்

லிபியாவிற்கு இரங்கல் தெரிவித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

மத்தியதரைக் கடலில் வீசிய டேனியல் புயல் காரணமாக கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறைந்தது 150 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில் டேனியல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏராளமான இறப்புகள், காயங்கள், கடுமையான சேதங்கள் அடைந்த லிபியாவிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது உண்மையான இரங்கலையும் ஒற்றுமையையும் தெரிவித்தது.

ஒரு அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் (MoFA) லிபியா அரசுக்கும் அதன் மக்களுக்கும், இந்த துயரத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தது.

மேலும் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்று கூறியுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button