புரட்சிகரமான புதிய மேக விதைப்பு திட்டத்திற்கான பணிகள் தொடங்கியது

மழை மேம்பாட்டிற்காக மேக விதைப்பு விமானங்கள் மூலம் நிகழ்நேரத்தில் மேகங்களின் விதைப்புத் திறனை பகுப்பாய்வு செய்யும் திறனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உருவாக்க முயல்கிறது. இந்த நடவடிக்கை மேகங்களிலிருந்து மழையை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேக விதைப்பு மற்றும் மதிப்பீடு செய்யும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும்.
5வது UAEREP மானிய சுழற்சியின் விருது பெற்ற ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேனியல் ரோசன்ஃபீல்ட் மற்றும் அவரது குழுவினருடன், மழை விரிவாக்க அறிவியலுக்கான UAE ஆராய்ச்சி திட்டம் (UAEREP) சமீபத்தில் ஒரு திட்ட கிக்-ஆஃப் கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியவந்தது. அபுதாபியில், இத்திட்டத்தில் ஒத்துழைக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான, Mohamed bin Zayed University of Artificial Intelligence (MBZUAI)-ல் கூட்டம் நடைபெற்றது.
திட்டத்தின் ஆராய்ச்சி முறை, குறிக்கோள் மற்றும் காலக்கெடு, அத்துடன் தேசிய வானிலை மையம் (NCM)-UAEREP மதிப்பீடு, மேற்பார்வை பொறிமுறை மற்றும் திட்ட காலம் முழுவதும் NCM-ல் இருந்து தேவைப்படும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றை குழு விவாதித்தது.
ஆராய்ச்சிக் குழுவின் பல்வேறு தேவைகள் குறித்து NCM குறிப்பிட்ட விவரங்களையும் கூட்டத்தில் வழங்கியது, ஏனெனில் இந்த திட்டம் இயந்திர கற்றல் நடைமுறைகளைப் பயன்படுத்தும். கூட்டத்தில் இருந்தவர்கள் MBZUAI வளாகம் மற்றும் ஆய்வக வசதிகளை சுற்றிப்பார்த்து, திட்டத்தில் பயன்படுத்தப்படும் தேவையான தொழில்நுட்பத்திற்கான சூழலை வழங்கினர்.



