அமீரக செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: கனமழையை எதிர்கொள்ள தயாராகும் குடியிருப்பாளர்கள்

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நாட்டில் கனமழை மற்றும் சீரற்ற காலநிலையை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நிலையற்ற வானிலை உச்சமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது..

இந்த வாரத்தில் கனமழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்கள் இப்போது உணவை சேமித்து வைத்து, மணல் மூட்டைகள் மூலம் தங்கள் வணிகங்களை பாதுகாத்து, தங்கள் கார்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துகின்றனர்.

ஏப்ரல் 16 அன்று நாட்டைப் பாதித்த பெருமழை மற்றும் வெள்ளம் பற்றிய நினைவுகள் இன்னும் அவர்களின் மனதில் பசுமையாக இருக்கின்றன, இது அவர்களை இது போன்ற செயலில் ஈடுபடத் தூண்டுகிறது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button