அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினர்!!

UAE: எமிரேட்ஸ் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று, கிறிஸ்மஸ் ஈவ் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினர். புத்தாண்டை எதிர்நோக்கி பண்டிகை காலத்தை கொண்டாட ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

ஜனாதிபதி ஷேக் முகமது சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவில் குடியிருப்பாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும், நான் உங்களுக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்க வாழ்த்துகிறேன். இந்த சந்தர்ப்பம் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அமைதி மற்றும் நல்வாழ்வை ஏற்படுத்தட்டும்” என்று அவர் X-ல் பதிவிட்டார்.

வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத், விடுமுறையைக் கொண்டாடுபவர்களுக்கு தனது அன்பான வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் இன்று “மெர்ரி கிறிஸ்துமஸ்” என்று பதிவிட்டார்.

திங்கட்கிழமை காலை துபாயில் உள்ள செயின்ட் மேரிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் சுமார் 1,500 பேர் பிரார்த்தனை மற்றும் விழாக்களில் கலந்து கொண்டனர். அவர்கள் தேவாலயத்திற்கு வெளியே கிறிஸ்து பிறப்பு காட்சியுடன் புகைப்படம் எடுத்து, மெழுகுவர்த்தி ஏற்றி, பாடல்களைப் பாடி, ஒன்றாக பிரார்த்தனை செய்தனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button