அமீரக செய்திகள்

மோசடி நடவடிக்கைகள் குறித்து UAE அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

UAE:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களை எச்சரித்தனர். பாதிக்கப்பட்டவர்களில் குடிமக்களும் மாணவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரகங்கள், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி, பணப் பரிமாற்றங்களைக் கோரும் மோசடியான மின்னஞ்சல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் ‘பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நோக்கங்களுக்காக பணம் பறிமாற்றம்’ கோரலாம், அல்லது ‘உதவித்தொகை பெற முன்பணம்’ கேட்கலாம் என்று அமைச்சகம் கூறியது.

இதுபோன்ற மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய மோசடிகளை எதிர்கொள்பவர்கள் Mofa-ன் அவசர தொலைபேசி எண் 0097180024 ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button