ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து 11வது மனிதாபிமான உதவி விமானத்தை காசாவிற்கு அனுப்பியது

பாதுகாப்பு அமைச்சரின் கூட்டு நடவடிக்கைக் கட்டளையானது, ‘பார்ட்ஸ் ஆஃப் குட்னஸ்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வடக்கு காசா பகுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை மற்றும் எகிப்திய விமானப்படையின் 11வது மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது .
காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் மனிதாபிமான நடவடிக்கையான ‘சிவல்ரஸ் நைட் 3(Chivalrous Knight 3)’ இன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
24 டன் உணவு மற்றும் நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற இரண்டு விமானங்கள் மூலம் வடக்கு காசா பகுதியில் அணுக முடியாத தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வானில் இருந்து அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. “பர்ட்ஸ் ஆஃப் குட்னஸ்” இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து மொத்தம் 462 டன் உணவு மற்றும் நிவாரண உதவிகள் விமானம் வானில் இருக்கும் போதே கொடுக்கப்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகம் தனது முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது. Emirates Red Crescent (ERC), Khalifa bin Zayed Al Nahyan Foundation (KF), Zayed bin Sultan Al Nahyan Charitable and Humanitarian Foundation மற்றும் பிற மனிதாபிமான மற்றும் தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளின் மூலம் இந்த உதவி வழங்கப்படுகிறது.