காணாமல் போன 14 வயது சிறுவன் சில மணி நேரங்களில் மீட்பு

UAE:
வீட்டில் இருந்து காணாமல் போன 14 வயது சிறுவன், சில மணி நேரங்களில் அஜ்மான் காவல்துறையால் மீட்கப்பட்டு மீண்டும் அவரது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விரிவான ஜுர்ஃப் மையத்தின் விசாரணைக் கிளையின் இயக்குனர் கேப்டன் அஹ்மத் ஜால் அல் ரமேதி கூறுகையில், சிறுவனின் பெற்றோரிடமிருந்து மையம் ஒரு அறிக்கையைப் பெற்றது. அதில் அவர்கள் மகன் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக தேட ஆரம்பித்த போலீஸ் குழுக்கள் சிறுவனை சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்தனர். போலீசார் குழந்தையின் தந்தையை தொடர்பு கொண்டு சிறுவன் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் காவல்துறையின் சமூக உதவிக் குழுவினர் சிறுவனைப் பராமரித்தனர்.
குழந்தையைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் திருப்பிக் கொடுப்பதில் அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர் சிறுவனை போலீஸிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். மேலும், சிறுவனின் பெற்றோர் அவனிடம் அதிக கவனம் செலுத்துவதாக உறுதியளித்தனர்.



