32 வயதான பாலஸ்தீனிய நோயாளி உயிரிழப்பு

UAE:
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) திங்களன்று காசா பகுதியைச் சேர்ந்த 32 வயதான பாலஸ்தீனிய நோயாளி உயிரிழந்ததை அறிவித்தது, அவர் வயிற்று புற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்களின் அபாய கட்டத்துடன் போராடி வந்தார்.
நாட்டிற்கு வந்ததும் உடனடியாக சிகிச்சைக்காக ஒரு சிறப்பு சுகாதார நிலையத்தில் நோயாளி அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து உயிரிழப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள MoHAP, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவருடைய ஆத்மா நித்திய சாந்தியடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தாருக்கு பொறுமையையும், ஆறுதலையும் தருமாறு வேண்டிக்கொண்டுள்ளது.
காசாவில் இருந்து வரும் நோயாளிகள் உட்பட அனைத்து நோயாளிகளுக்கும் உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.



