2,000 அரசாங்க நடைமுறைகளை ரத்து செய்ய ஜீரோ அரசு அதிகாரத்துவத் திட்டத்தை தொடங்கிய துணைத் தலைவர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், ஒரு வருடத்திற்குள் 2,000 அரசாங்க நடைமுறைகளை ரத்து செய்ய ஜீரோ அரசு அதிகாரத்துவத் திட்டத்தை (ZGB) தொடங்கியுள்ளார்.
“30 கூட்டாட்சி நிறுவனங்களின் முன்னிலையில், அரசாங்க அதிகாரத்துவத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு புதிய திட்டத்தை நாங்கள் தொடங்கினோம், அதன் படி ஒரு வருடத்திற்குள் 2,000 அரசாங்க நடைமுறைகளை அகற்றவும், அரசாங்க சேவைகளின் கால அளவை 50 சதவிகிதம் குறைக்கவும், நூற்றுக்கணக்கானவற்றை மறுசீரமைக்கவும் அரசு நிறுவனங்கள் செயல்படும்” என்று ஷேக் முகமது X-ல் பதிவிட்டுள்ளார்.
அரசு சேவைகளின் காலத்தை 50 சதவீதம் குறைத்து, பல அரசு சேவைகளை மறுசீரமைப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேவையற்ற அதிகாரத்துவ நடைமுறைகளை நீக்குவதில் சிறந்து விளங்கும் குழுவிற்கு திர்ஹாம் ஒரு மில்லியன் (ரூ. 2,25,99,686) ஊக்கப் பரிசாக வழங்கப்படும்.
“எங்கள் இலக்கு மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அவர்களுக்குத் தகுதியான ஆறுதல் மற்றும் சேவையை வழங்குவது மற்றும் சேவைகளை வழங்குவதில் உலகின் சிறந்த அரசாங்கமாக இருக்க வேண்டும்” என்றும் ஷேக் முகமது கூறினார்.
மேலும், அரசு நிறுவனங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஓராண்டுக்குள் முடிவுகளை அறிவிப்பேன் என்றார்.



