அமீரக செய்திகள்

பலஸ்தீன அகதிகள் அமைப்பிற்கு $5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பலஸ்தீன அகதிகள் அமைப்பின் (UNRWA) ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக்கின் முயற்சிகளுக்கு ஆதரவாக $5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் சயீத் அல்-நஹ்யான், சிக்ரிட் காக்குடன் பாலஸ்தீனிய மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான முறையில் நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவது குறித்து விவாதித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

இரு அதிகாரிகளும் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை விரைவாக நிவர்த்தி செய்வதற்கான வழிகளை மதிப்பாய்வு செய்தனர், UNRWA-ன் முக்கியத்துவம் மற்றும் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஏஜென்சியின் மனிதாபிமான உதவி முயற்சிகளை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு மந்திரி, காசாவில் நிலையான போர்நிறுத்தத்தை அடைவதற்கும், பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் அவசர மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதற்கும் சர்வதேச பலதரப்பு பணிகளை வலியுறுத்தினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button