துபாய் கேன் முன்முயற்சியால் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலின் பயன்பாடு 18 மில்லியன் குறைந்தது

தற்போது 50 நிலையங்கள் உள்ள நிலையில், மேலும் 30 பொது நீர் நிலையங்கள் நகரைச் சுற்றி அமைக்கும் திட்டம் நடைபெறவுள்ளது.
நகரம் முழுவதும் நீடித்து நிற்கும் துபாய் கேன் முயற்சி தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 18 மில்லியன் (500ml) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாடட்டை குறைத்துள்ளது.
அதன் கூட்டாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களின் ஆதரவுடன், துபாய் நகரம் முழுவதும் உள்ள பூங்காக்கள் மற்றும் பிரபலமான சுற்றுலா தலங்கள் உட்பட 50 இடங்களில் பொது நீர் நிலையங்களை நிறுவியுள்ளது. இந்த நிலையங்கள் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் லிட்டர் தண்ணீரை விநியோகித்துள்ளன.
துபாய் கேன் பிப்ரவரி 15, 2022 அன்று துபாயின் பட்டத்து இளவரசரும் துபாயின் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், நிலையான எதிர்காலத்தை உருவாக்கவும் மேலும் வனவிலங்குகள் மற்றும் கடல் சூழலைக் காப்பாற்றிடவும் அமைக்கப்பட்டுள்ளது .
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் தொலைநோக்குப் பார்வையுடன், எமிரேட்டை ஒரு முன்னணி நிலையான இடமாக மாற்றும் நோக்கில் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிலைத்தன்மை 2024 வரை நீட்டிக்கப்படுவதால், துபாய் கேன் முயற்சியானது நகரைச் சுற்றியுள்ள இடங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 30 கூடுதல் நீர் நீரூற்றுகள் நிறுவப்படுவதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை மீண்டும் நிரப்பக்கூடிய தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தண்ணீர் வடிகட்டிகளை நிறுவுதல் போன்ற எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர் பொதுவாக ஒரு வருடத்தில் சராசரியாக 450 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்துகிறார், அந்தவகையில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் 4 பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறது. துபாய் கேன் முன்முயற்சி குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து, கழிவுகளைக் குறைக்கவும், மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் நிலப்பரப்புகளிலும் நமது பெருங்கடல்களிலும் சேருவதைத் தடுக்கவும் உதவுகிறது.