அமீரக செய்திகள்

ஷார்ஜா: காலையில் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் மாலைக்குள் சரி செய்யப்பட்டது எப்படி?

ஷார்ஜாவில் வெள்ளிக்கிழமை காலை வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் மாலைக்குள் சரி செய்யப்பட்டது. இதற்கு ஷார்ஜா நகர முனிசிபாலிட்டி குழுவின் விரைவான பதில் மற்றும் 24 மணிநேர செயல்பாடுகளே முக்கிய காரணம்.

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், ஷார்ஜா அதிகாரிகள் மழையின் தாக்கத்தை சமாளிக்க பாதுகாப்பையும் ரோந்து பணியையும் முடுக்கிவிட்டு அவசரகால பதில் குழுக்களை அனுப்பினர்.

அவர்கள் மழைநீரை வெளியேற்றவும், வெள்ளம் சூழ்ந்த சாலைகளை சுத்தம் செய்யவும் சக்கரங்களில் பெரிய பம்பிங் இயந்திரங்களை பயன்படுத்தினர். மழை பெய்வது நின்றவுடன் மாலைக்குள் இயல்பு நிலை திரும்பியது

ஷார்ஜா நகர முனிசிபாலிட்டியின் கையாளுதல் சேவையின் இயக்குனர் காலித் பின் ஃபலாஹ் அல் ஸ்வேதி, எமிரேட்டில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழை பெய்ததால் விடியற்காலையில் இருந்து தங்கள் குழுக்கள் தொடர்ந்து வேலை செய்ததாக கூறினார். மேலும் திறமையான குழுக்கள் மூலம் நகரத்தில் ஏற்பட்ட வெள்ளச் சூழல் மற்றும் அவசரநிலைகள் விரைவாக கையாளப்பட்டது என்று அல் ஸ்வேதி கூறினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button