அமீரக செய்திகள்

ஈத் அல் பித்ர் விடுமுறையை முன்னிட்டு குறைந்தது ஆறு நாட்கள் துபாயில் பார்க்கிங் இலவசம்

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), ரமலான் 29 முதல் ஷவால் (இஸ்லாமிய மாதங்கள்) 3 வரை பார்க்கிங் இலவசம். அதாவது ஏப்ரல் 10 ஆம் தேதி ஈத் அல் பித்ர் வரும் நிலையில், திங்கட்கிழமை, ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை பார்க்கிங் கட்டணம் ஏதுமில்லை. துபாயில் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கிங் எப்போதும் இலவசம் என்பதால், எமிரேட்டில் வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஆறு நாட்கள் இலவசமாக பார்க்கிங் செய்யலாம்.

இருப்பினும், ஈத் அல் பித்ர் சந்திரனைப் பொறுத்து ஏப்ரல் 9 அன்று விழுந்தால், ஐந்து நாட்களுக்கு மட்டுமே பார்க்கிங் இலவசம். ஷவாலின் 4 ஆம் தேதி (ஈத் நான்காவது நாள்) கட்டண வாகன நிறுத்தம் மீண்டும் தொடங்கும்.

இதற்கிடையில், ஈத் அல் பித்ர் விடுமுறையின் போது RTA தனது அனைத்து சேவைகளுக்கும் வேலை நேரத்தை அறிவித்தது.

29ம் தேதி ரமலான் மற்றும் 3வது ஷவ்வால் ஆகிய நாட்களில் வாகன சோதனை மையங்கள் திறந்திருக்கும்

ஈத் விடுமுறை நாட்களில் அனைத்து வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் மூடப்படும். இருப்பினும், உம் ரமூல், டெய்ரா, பர்ஷா, அல் கிஃபாஃப் மையங்களின் ஸ்மார்ட் வாடிக்கையாளர் மையங்கள் மற்றும் RTA தலைமை அலுவலகம் வழக்கம் போல் 24/7 செயல்படும்.

துபாய் மெட்ரோ
துபாய் மெட்ரோ ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும், ஏப்ரல் 8-13 காலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், 14-ம் தேதி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் துபாய் மெட்ரோ இயங்கும்.

துபாய் டிராம்
திங்கள் முதல் சனி வரை: காலை 6 மணி – 1 மணி
ஞாயிறு: காலை 9 மணி முதல் 1 மணி வரை இயங்கும்

துபாய் பேருந்து
EID அல் பித்ர் விடுமுறையின் போது துபாய் பேருந்து மற்றும் நகரங்களுக்கு இடையேயான பேருந்துகளின் இயக்க நேரங்கள் மாற்றியமைக்கப்படும். RTA செயலியில் பயணிகள் திருத்தப்பட்ட மெட்ரோ மற்றும் கடல் போக்குவரத்து நேரத்தை சரிபார்க்கலாம்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button