பாலஸ்தீனியர்களுக்கு கூடுதல் அவசர நிவாரண உதவிகளை அனுப்பிய UAE!

UAE: காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஞாயிற்றுக்கிழமை கூடுதல் அவசர நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. கப்பலில் தங்குமிடம் பொருட்கள் மற்றும் அடிப்படை உணவு பொருட்கள் இருந்தன.
ஜனாதிபதி ஷேக் முகமது அவர்களால் தொடங்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கேலண்ட் நைட் 3 மனிதாபிமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் மூலம் இந்த உதவி விநியோகம் செய்யப்பட்டது .
காசாவில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குழந்தைகளுக்கான ஃபார்முலா மில்க் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டன.
காயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கு உதவி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக முற்றுகையிடப்பட்ட பகுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கள மருத்துவமனை திறக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த உதவி அனுப்பப்பட்டுள்ளது.
150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பல்வேறு கட்டங்களாக நிறுவப்பட்டது. இந்த மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை மற்றும் எலும்பியல் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும், மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மயக்க மருந்து சேவைகள் மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்படும்.
இது உள் மருத்துவம், பல் மருத்துவம், குடும்ப மருத்துவம் மற்றும் மனநல சிகிச்சையையும் வழங்குகிறது. CT ஸ்கேன் சேவைகள், ஒரு ஆய்வகம் மற்றும் ஒரு மருந்தகம் ஆகியவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



