வடமேற்கு துருக்கியில் மிதமான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அங்காரா-Earthquake:
வடமேற்கு துருக்கியில் திங்கள்கிழமை மிதமான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மக்கள் அச்சத்தில் தெருக்களில் தஞ்சமடைந்தனர். காயங்கள் அல்லது சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புர்சா மாகாணத்தில் உள்ள ஜெம்லிக் நகருக்கு அப்பால் உள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்ததாக பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD தெரிவித்துள்ளது. இது உள்ளூர் நேரப்படி காலை 10:42 மணிக்கு (07:42 GMT), சுமார் 9 கிலோமீட்டர் (5.6 மைல்) ஆழத்தில் தாக்கியதாக
கூறபட்டுள்ளது. இஸ்தான்புல் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் மக்கள் அச்சத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர்.
பிப்ரவரியில், 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 11 தெற்கு மற்றும் தென்கிழக்கு துருக்கி மாகாணங்களையும் வடக்கு சிரியாவின் ஒரு பகுதியையும் அழித்தது. துருக்கியில் 50,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


