அமீரக செய்திகள்

காசாவைச் சேர்ந்த பாலஸ்தீனிய புற்றுநோயாளி UAE மருத்துவமனையில் உயிரிழப்பு

UAE:
சமீபத்தில் காசா பகுதியில் இருந்து வந்த 49 வயதான பாலஸ்தீனிய நோயாளி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறந்ததாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அறிவித்தது.

பெண் நோயாளி மார்பக புற்றுநோயின் மேம்பட்ட கட்டத்தில் ‘மோசமான நிலையில்’ போராடிக் கொண்டிருந்தார்.

MoHAP-ன் அறிக்கைப்படி, நோயாளி பல்வேறு உடல்நல சிக்கல்களுடன் போராடினார். அவர் நாட்டிற்கு வந்ததும், தீவிர சிகிச்சைக்காக உடனடியாக ஒரு சிறப்பு சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டார். சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து உயிரிழப்பை சந்தித்தார்..

இந்த இக்கட்டான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அமைச்சகம் தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டதுடன், அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு பொறுமையையும் ஆறுதலையும் வழங்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button