உலக செய்திகள்

காசா பகுதியில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 13,000-ஆக உயர்வு

காசா
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் அக்டோபர் 7ஆம் தேதி வெடித்ததில் இருந்து காசா பகுதியில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 13,000 தாண்டியுள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.

இறந்தவர்களில் 5,500 குழந்தைகள் மற்றும் 3,500 பெண்கள், மேலும் 30,000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று ஊடக அலுவலகத்தின் தலைமை இயக்குநர் இஸ்மாயில் அல்-தவாப்தா ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 6,000 தாண்டியுள்ளதாகவும், இதில் 4,000 குழந்தைகள் மற்றும் பெண்கள், இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் இன்னும் இருப்பதாகவும் அல்-தவாப்தா மேலும் கூறினார்.

அக்டோபர் 7ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் கடந்த வாரங்களாக தாக்குதல்களை நடத்தி வருகிறது, இதில் ஹமாஸ் போராளிகள் சுமார் 1,200 பேரை கொன்று 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை பிடித்து சென்றனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button