அமீரக செய்திகள்

உடற்தகுதியை மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள்

அபுதாபியில் ரமலான் பண்டிகையையொட்டி, உடல் நலம் மற்றும் உடற் தகுதியை மேம்படுத்தும் வகையில் அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். அபுதாபி அரசு விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாவது பதிப்பு மார்ச் 28 ஆம் தேதி வரை அபுதாபி ஸ்போர்ட்ஸ் ஹப், அல் ஃபோர்சன் கிளப் மற்றும் ஹுதைரியாத் தீவு ஆகிய இடங்களில் ரமலான் மாதத்தில் நடைபெறுகிறது.

பணியாளர்களின் மன உறுதி, தனிப்பட்ட உறவுகள், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட மேம்பாட்டை உயர்த்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. குழுப் பணியின் உணர்வைக் கொண்டாடும் சூழ்நிலையில், அவர்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதையும் போட்டிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

கால்பந்து, வில்வித்தை, உடற்பயிற்சி, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, சதுரங்கம், பூப்பந்து, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற 11 விளையாட்டுகள் இப்போட்டிகளில் அடங்கும். மேலும், மார்ச் 26ஆம் தேதி யாஸ் மெரினா சர்க்யூட்டில் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியும் நடைபெறவுள்ளது.

அரசு நிறுவனங்களில் இருந்து பங்கேற்கும் அணிகள் தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை போட்டியிடுகின்றன.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button