இங்கிலாந்துக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் கேத்லீன் புயல் காரணமாக திருப்பி விடப்பட்டது!

துபாயில் இருந்து இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் கத்லீன் புயல் காரணமாக லண்டன் கேட்விக் நகருக்கு திருப்பி விடப்பட்டு பாதிக்கப்பட்ட பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேத்லீன் புயல் காரணமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று காரணமாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 6-ம் தேதி திசை திருப்பப்பட்டதைத் தொடர்ந்து, வானிலை நிலையைப் பொறுத்து, இன்று கிளாஸ்கோவிற்கு பயணத்தைத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
“ஏப்ரல் 6 ஆம் தேதி துபாயில் இருந்து கிளாஸ்கோ செல்லும் EK027 விமானம் பாதகமான வானிலை காரணமாக லண்டன் கேட்விக்கிற்கு திருப்பி விடப்பட்டதை எமிரேட்ஸ் உறுதிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது, மேலும் வானிலை முன்னேற்றங்களுக்கு உட்பட்டு ஏப்ரல் 7 ஆம் தேதி கிளாஸ்கோவிற்கு அவர்களின் பயணத்தைத் தொடரும்” என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.