கனமழையின் போது துபாய் காவல்துறைக்கு 25,107 அழைப்புகள் வந்தாக தகவல்

25,000 க்கும் மேற்பட்ட அவசர மற்றும் அவசரமற்ற அழைப்புகள் மோசமான வானிலையின் போது துபாய் காவல்துறைக்கு வந்தாக கூறப்பட்டுள்ளது.
நிர்வாக விவகாரங்களுக்கான பொதுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் மன்சூர் அல் கர்காவி கூறுகையில், செவ்வாயன்று அவசர எண்ணான 999க்கு 21,300 அழைப்புகளும், அவசரமற்ற அழைப்பு மையமான 901க்கு 3,807 அழைப்புகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பிப்ரவரி 12ஆம் தேதி 575 போக்குவரத்துச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. துபாய் காவல்துறைக்கு மொத்தம் 25,107 அழைப்புகள் வந்தன. அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைவாக பதிலளித்து சிறந்த சேவையை வழங்கினர் என்று கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நாட்டின் முக்கிய பகுதிகளில் நிலையற்ற வானிலை நீடிப்பதால், நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் தொலைதூர வகுப்புகள் மற்றும் வேலைகளை இரண்டு நாட்களுக்கு செயல்படுத்தின.
மேலும், வேலைக்குச் செல்லும் மற்றும் திரும்பும் ஊழியர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நிறுவனங்களை அதிகாரிகள் வலியுறுத்தினர்.



