அமீரக செய்திகள்

டாக்ஸியில் விட்டுச் சென்ற பணப்பை 30 நிமிடங்களில் சுற்றுலாப் பயணியிடம் ஒப்படைப்பு

Dubai:
துபாயில் புத்தாண்டைக் கொண்டாடிய சுற்றுலாப் பயணி ஒருவர், டாக்ஸியில் விட்டுச் சென்ற 76,000 திர்ஹம்களை ($20,700) போலீசார் மீட்டு உரிய நபரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலையில், இரவு கொண்டாட்டங்களுக்குப் பிறகு, அடையாளம் தெரியாத நபர் எமிரேட்டில் உள்ள அவரது ஹோட்டலில் இறக்கிவிடப்பட்டார். வாகனத்தை விட்டு வெளியேறிய பின், அந்த நபர் $17,000 (Dh62,435) கொண்ட பையை விட்டுச் சென்றதை உணர்ந்து துபாய் காவல்துறையைத் தொடர்பு கொண்டார்.

அரை மணி நேரத்தில் போலீசார் அந்த பையை மீட்டு சுற்றுலா பயணியிடம் பணத்தை திருப்பி கொடுத்தனர்.

“புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு அதிகாலை 2 மணியளவில் சுற்றுலாப் பயணியிடமிருந்து துபாய் காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அப்போது, அவர் ஆன்லைனில் ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்ததையும், பணத்தை மீட்டெடுக்க உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்” என்று துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜமால் அல் ஜல்லாஃப் கூறினார்

சுற்றுலா போலீசார் டாக்ஸியை கண்டுபிடித்து டிரைவரை தொடர்பு கொண்டனர். அதிகாரிகளின் அழைப்பை ஏற்று டாக்சி ஓட்டுநரும் உடனடியாக பணத்தைத் திருப்பிக் கொடுத்ததற்காக போலீசார் அவருக்கு நன்றி கூறினர்.

சுற்றுலா காவல் துறையின் இயக்குனர் பிரிக் கல்பான் ஒபைட் கூறுகையில், “பையை கண்டுபிடித்து திருப்பி அனுப்ப 30 நிமிடங்கள் ஆனது. எங்கள் அதிகாரிகள் இதுபோன்ற சம்பவங்களுக்கு உடனடியாக பதிலளிக்கவும், துபாயில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் பயிற்சி பெற்றுள்ளனர்” என்று பிரிக் ஒபைட் கூறினார்.

சுற்றுலாப் பயணி துபாய் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார், அவர்களின் தொழில்முறை மற்றும் விரைவான பதிலைப் பாராட்டினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button