உலக செய்திகள்இந்தியா செய்திகள்

இங்கிலாந்து: கடல் அலையில் சிக்கி இந்திய மாணவி உயிரிழந்தார்.

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சசிதர ரெட்டி. இவரது மகள் சாய் தேஜஸ்வி கொம்ம ரெட்டி. விண்வெளி துறையில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக தேஜஸ்வி இங்கிலாந்து நாட்டுக்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில், மாலை தோழிகளுடன் சேர்ந்து காற்று வாங்க பீச்சுக்கு சென்று உள்ளார். அப்போது கடல் அலை சற்று அதிகமாக இருந்தது, எப்படியோ கடல் அலையில் சிக்கி கொண்டனர். அவர் உள்பட 3 பேர் கடுமையான ராட்சச அலையில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

இவர்களில் தேஜஸ்வியின் உடலை மீட்பு குழுவினர் முதலில் மீட்டனர். அதற்கடுத்த நாள் மற்ற 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி சசிதர ரெட்டி கூறும்போது, தேர்வு எழுதிய பின்னர் ஓய்வாக இருப்பதற்காக அவர்கள் பீச்சுக்கு சென்றுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசத்தில் கடல் அலையில் சிக்கி அவர்கள் உயிரிழந்து விட்டனர். மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மற்றும் சிலர் எங்களுக்கு நிறைய உதவிகளை செய்தனர்.

தேஜஸ்வியின் உடலை இந்தியா கொண்டு வர இருந்த நடைமுறை சிக்கல்களை தீர்க்க உதவினர் என கூறியுள்ளார். இதன்படி, தேஜஸ்வியின் உடல் நாளை (வெள்ளி கிழமை) ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button