அமீரக செய்திகள்

உரிமம் பெறாத தீ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 50,000 திர்ஹம் அபராதம்

அபுதாபி: அங்கீகரிக்கப்படாத தீ பாதுகாப்பு நடைமுறைகளில் ஈடுபடுவதற்கு எதிராக அபுதாபி குடிமைத் தற்காப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கு இணங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் சிவில் பாதுகாப்பு சேவைகளை நிர்வகிக்கும் 2012 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண் (24)-ன் படி, சிவில் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியின்றி தீ பாதுகாப்பு அமைப்புகள், சாதனங்கள் அல்லது உபகரணங்களை உற்பத்தி செய்தல், வர்த்தகம் செய்தல், நிறுவுதல் அல்லது பராமரித்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்..

இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் அபராதங்களைத் தவிர்ப்பதற்கும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான உரிமங்களைப் பெறுமாறு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button