அமீரக செய்திகள்

நீர் கால்வாய்களில் இறந்த மீன்கள்: காரணத்தை தெளிவுபடுத்திய துபாய் முனிசிபாலிட்டி

துபாய் முனிசிபாலிட்டி (DM) மழை மற்றும் வெள்ளத்திற்குப் பிறகு நீர் கால்வாய்களில் இறந்த மீன்கள் காணப்படுவது இயற்கையான நிகழ்வு என்று தெளிவுபடுத்தியுள்ளது.

பல ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் எமிரேட்டில் நடை பாதைகள் மற்றும் நீர் கால்வாய்களில் இறந்த மீன்கள் இருப்பதாக தெரிவித்தன.

இது தொடர்பாக குடிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இது ஒரு “இயற்கை நிகழ்வு” மற்றும் பல காரணங்களால் நிகழலாம். “மழைப்பொழிவு அதிகரிப்பு அல்லது கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பு போன்ற வானிலை நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் மீன்கள் அடிக்கடி இறக்கின்றன”

நிலைமையை நிர்வகிப்பதற்கான குழுக்கள் தற்போது களத்தில் உள்ளனர். சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்ட நெறிமுறைகளின் படி நகராட்சியின் குழுக்கள் சிக்கலை நிர்வகித்து, தேவையான துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button