COP28: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் டிசம்பர் 6-ம் தேதி காலநிலை மாநாட்டில் உரையாற்றுகிறார்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் டிசம்பர் 6-ம் தேதி ‘அமைதி ஆன்மீகம் மற்றும் சுற்றுச்சூழல்’ என்ற தலைப்பில் COP28 – UN காலநிலை மாநாட்டில் உரையாற்றுகிறார். சுற்றுசூழல் மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர் சூசானா முஹமட் உடனான உரையாடலின் போது அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நம்பிக்கை பெவிலியனில் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
“பண்டைய இந்திய பாரம்பரியம் இயற்கையின் புனிதத்தை நம்புகிறது. அது மலைகள், ஆறுகள், சூரியன், சந்திரன் மற்றும் மரங்களை புனிதமானதாக உணர்ந்தது, மேலும் புனிதமானது மரியாதைக்குரியது. இயற்கையின் மீதான பாரம்பரிய மரியாதையை மீட்டெடுப்பதன் மூலம், நமது சுற்றுப்புறத்தில் தூய்மையை மீட்டெடுக்க முடியும்” என்று அவர் கூறினார்.
COP28 -ல் நடைபெறும் முக்கிய மதங்களுக்கு இடையேயான விவாதத்தில், ‘நில மறுசீரமைப்பு குறித்து உங்கள் நம்பிக்கை சமூகங்களை எவ்வாறு அணிதிரட்டுவது’ என்பது குறித்த தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாள் பயணமாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார்



