அமீரக செய்திகள்
கடற்கரைகள், பொது பூங்காக்கள் மற்றும் சந்தைகள் மூடல் -துபாய் நகராட்சி அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலவும் வானிலை காரணமாக எமிரேட்டில் உள்ள அனைத்து கடற்கரைகள், பொது பூங்காக்கள் மற்றும் சந்தைகளை மூடுவதாக துபாய் நகராட்சி அறிவித்துள்ளது.
துபாயில் உள்ள கடற்கரைகள் நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுப் பூங்காக்கள் மற்றும் சந்தைகள் சனிக்கிழமை முதல் மூடப்படும்.
அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகியவை வார இறுதியில் எதிர்பார்க்கப்படும் மோசமான வானிலை காரணமாக எமிரேட்ஸில் உள்ள பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தன.
#tamilgulf