இந்தியா செய்திகள்உலக செய்திகள்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று இந்தியா வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜூன் 21-22 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
18 வது லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் அரசு அமைந்த பிறகு இருதரப்பு அரசு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின் போது, பிரதமருடன் இருதரப்பு ஆலோசனை நடத்துவது மட்டுமின்றி, பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
#tamilgulf