இ-ஸ்கூட்டர் மீறல்களைக் கண்காணிக்க துபாய் கடற்கரையில் ரோந்து செல்லும் AI ரோபோ!

AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் இயக்கப்படும் அகலமான கேமரா மற்றும் நான்கு மோஷன் சென்சார்கள் கொண்ட ஐந்து அடி, 200 கிலோ ரோபோ, சைக்கிள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துபவர்களின் மீறல்களைக் கண்டறிய சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) ஜுமேரா கடற்கரையில் பயன்படுத்தப்பட்டது.
சீன ரோபாட்டிக்ஸ் மற்றும் டெக்னிக்கல் சிஸ்டம்ஸ் வழங்குனரான டெர்மினஸால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ, தன்னாட்சி முறையில் இயங்குகிறது, ஆனால் ஒரு பாதுகாப்பு அதிகாரி அவசரகாலத்தில் உதவ தயாராக இருக்கிறார்.
“அடுத்த 30 நாட்களுக்கு, இந்த ரோபோ, வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும், ஜுமேரா கடற்கரை 3-ம் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பாதையில் சுமார் 600 மீட்டர் பரப்பளவில் செயல்படும்” என்று RTA இன் எண்டர்பிரைஸ் இயக்குநர் ஹமத் அலாஃபீஃபி தெரிவித்தார்.
தற்போது, 2 கிமீ வரையிலான கண்காணிப்பில் 85 சதவீத துல்லியத்துடன் மீறல்களை ரோபோ அடையாளம் காண முடியும். இது துபாய் போலீஸ் மற்றும் RTA போன்ற அதிகாரிகளுக்கு 5 வினாடிகளுக்குள் தரவை வழங்க முடியும். இந்த ரோபோ பல்வேறு வானிலை நிலைகளில் திறமையாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



