உலக செய்திகள்

பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி; 35 பேர் காயம்

Jordan bus accident: ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு வடக்கே பால்காவில் உள்ள சல்ஹூப்-ஜெராஷ் சாலையில் புதன்கிழமை காலை பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர்.

தியாகி வாஸ்பி அல் தால் வனப்பகுதிக்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் சென்ற போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பிரதான சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொது பாதுகாப்பு இயக்குநரகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டது, மேலும், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தை தொடர்ந்து ஜெராஷிலிருந்து இர்பிட் வரையிலான போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button