சட்டவிரோதமாக குடியேறியவர்களின் படகு மூழ்கியதில் சுமார் 21 பேர் பலி

துருக்கியின் ஏஜியன் கடற்கரையில் வெள்ளிக்கிழமையன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களின் படகு மூழ்கியதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தேசிய பொது ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணமான கனக்காலேயில் Eceabat மாவட்டத்தின் கடற்கரையில், புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து மூழ்கியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் பத்து கடலோர காவல்படை மீட்பு படகுகளின் ஆதரவுடன் சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும், நான்கு நபர்கள் மீட்கப்பட்டதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள கபேட்பே துறைமுகத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
படகில் பயணம் செய்தவர்களின் சரியான எண்ணிக்கை, அவர்கள் சென்ற இடம் மற்றும் சம்பவத்தின் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை என்று செய்தி நிறுவனம் மேலும் கூறியது.